சோவியத்தில் வாட்டி வதக்கப்பட்ட போரிஸ் பாஸ்டர்நாக், ருஷ்யப் புரட்சியைப் பின்னணியாக வைத்து எழுதிய நாவல் ‘டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ருஷ்ய இலக்கியத்தில் இந்த நாவல் ஒரு மைல்கல் என்கிறார்கள்.

‘டாக்டர் ஷிவாகோ’ ருஷ்ய மொழியில் வெளிவர சி.ஐ.ஏ. ரகசியமாக நிதி அளித்தது என்றும் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற சி.ஐ.ஏ. செய்த ஏற்பாடு அது என்றும் ஒருவர் புத்தகம் எழுதுகிறார்.

பாஸ்டர்நாக்கிற்கு 1958இல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு ருஷ்யாவை விட்டுச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசு நிர்ப்பந்தத்தால் பாஸ்டர்நாக் பரிசை நிராகரித்தார். ஆனால் நோபல் பரிசு அமைப்பு அதை ஏற்கவில்லை.

‘வாஷிங்டன் போஸ்ட்’டில் நீண்ட கட்டுரை.